பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வீட்டினைப் புரப்ப தற்கே விரும்புவீர் உரிமை தன்னை: நாட்டினை உயர்த்து தற்குக் கடமையை நயந்த துண்டோ? கோட்டமில் மனத்தாற் சொல்வேன் கூறிய இரண்டும் வேண்டும்: கேட்டினை நாமே செய்தால் கிளர்ச்சியாற் பயனே இல்லை; இருள்மிகு நமது வீட்டில் எழில்ஒளி புகுவ தற்குப் பொருள்வரு வழியை மூடிப் போடுதல் முறையோ ? சொல்வீர் மருஞ்ற நாட்டு மக்கள் மயக்குறச் செய்த பின்னர் வரும்நம துரிமை என்றால் வாழ்வென ஒன்று வேண்டா. நம்முடை வறுமை நீக்க நாட்டினை வறுமை செய்தால் அம்முறை சரிஎன் றோதார் ஆதலின் தோழர் தம்மை வம்மென அழைப்போம் கூடி -- வந்தபின் உழைப்போம் ஒன்றாய்; தம்முயர் நாடுங் காப்போம் நலமுற வீடுங் காப்போம்.