பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மணஞ்செய்ய மகளிர்தமக் கிருபத் தைந்து வயதாக வேண்டுமென வகுக்க வேண்டும்; பணஞ்செய்யுந் திரைப்படத்தார் சமுதா யத்தைப் பாழ்படுத்துங் கெடுகாமக் காட்சி காட்டா வணஞ்செய்ய விதிவகுக்க வேண்டும்; காமம் வழிகின்ற கிண்ணங்கள் போன்ற தாள்கள் குணங்கொய்யப் பெருகுவதைத் தடுத்தல் வேண்டும்; குடும்பநலத் திட்டங்கள் வெற்றி யாகும். மடமையினைத் தகர்த்தெறிந்து நாட்டு மக்கள் வளமாக வாழ்வதற்குப் பெரியார் சொன்ன திடமருவுங் கொள்கைகளை மனத்திற் கொண்டு தெளிந்துணர்ந்து நடைமுறையில் போற்றல் வேண்டும்: கடமையொடு கண்ணியமுங் கட்டுப் பாடும் காத்துவருங் குடும்பங்கள் தோன்றச் செய்வோம் கொடுமைக்கே ஆளாகிப் பாழா காமல் குடும்பநலங் காப்பதனால் நாடுங் காப்போம்.