பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அடுப்பிற் குழலூதும் அவ்வாயால் மூங்கில் கொடுக்குங் குழலூதும் கொற்றம் அவர்க்குண்டு: பாலூட்டித் தாலாட்டிப் பாட்டிசைத்த தாய்க்குலத்தை, மாலூட்டுந் துன்பத்தை மாற்றுகின்ற பெண்ணினத்தைப் பேணா தடிமையென்று பேசுகின்றீர்! சற்றேனும், நானா துரிமைபெற நாடுகிறீர் பித்துடையீர்! பேயென்றும் நாயென்றும் பேதுரைகள் கொட்டுகிறீர்! தாயென்றுந் தங்கையென்றுந் தக்கதுணை என்றெல்லாம் உற்றமுறை சொல்வதற்கிங் குற்றவரார்? மாதரன்றோ? குற்றமெலாஞ் செய்தாலும் பற்றுடனே காப்பவரார்? அன்னை நகிற்பாலால் ஆற்றல் மிகப்பெற்றிர், மின்னை நிகர்மனையின் விஞ்சுசுவைத் தேன்மொழியால் விண்ணையுஞ் சாடிவரும் வீரமுற்றீர், என்றாலும் பெண்ணை யிகழ்கின்றீர்! பெண்ணுக்கு முன்னேற்றம் தாராத நாட்டில் தருமுரிமை மெய்யாகச் சேராது; பொய்கின்று செப்பும் வரலாறே, ! ينا/ 'இன்றுரிமை வேண்டி எழுந்துவிட்டார் பெண்ணினத்தார்; நன்றன்று பெண்ணுரிமை; நால்வேதம் ஒவ்வாது. அடிமைப் பிறப்பாகும் அப்பிறவி" என்றால் கடிதே அதைப்பொசுக்கக் காட்டுகிறான் தீப்பந்தம்: மங்கையர்க்குச் சார்பாக மாவீரன் பாடுவதை இங்கெடுத்துப் போற்றுவமேல் ஏற்றமுறும் நம்நாடு; "ஞானம் உரிமை அறம் நல்லகுடிப் பெண்மகட்குப் பேணுங் குணமாகும்; பீடுபெறும் இக்குணங்கள் பெற்றுள்ள மாதரார் பெற்றெடுத்த நன்மக்கள் கற்றறிவும்; தாய்நாடு காக்குங் கடனுணர்வும் முற்றி யிருப்பர் முளைத்துவரும் நெற்பயிர்கள் உற்ற நிலத்தியல்பை ஒத்திருத்தல் உண்மையன்றோ?