பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மனிதன் எங்கே செல்கிறான்?



தவர் யார்? இந்தச் சமுதாயத்தைக் கண்டால் பாரதியார் இதனுடன் கொஞ்சிக் குலாவுவாரா, கொதித்தெழுவாரா? நீங்களே சொல்லுங்கள்.

சமுதாயம் கிடக்கட்டும். அரசியல்தான் என்ன வாழ்கிறது! அதிலும் எத்தனையோ கொடுமைகள் மலிந்துள்ளன! அரசியல் அரங்கம், பதவி வேட்டைத் தலமாகிவிட்டதே யன்றிப் பணியாற்றி மக்களுக்குத் தொண்டாற்றும் இடமாய் இல்லையே! இன்னும் இன்றைய அரசியல் பற்றி எழுதின், அளவிலடங்காது. மற்றும், அது குட்டையைக் குழப்பியதாகவே முடியும். ஆதலால், அது பற்றி ஒன்றும் கூறாது விடுத்து, உண்மையில் பாரதியாரைப் பாராட்ட வேண்டுமாயின், அவர் சொன்னவற்றையெல்லாம் செயலில் கொண்டு வர முயல வேண்டுமே ஒழிய, வீண் ஆடம்பர விழாக்களும், மண்டபங்களும், மற்றைய ஆரவாரங்களும் பயனற்றன என்று கூறி முடிக்கின்றேன். பாரதியார் வாழ, அவர் புகழ் வாழ, அவர் வாய்மொழிப்படியே பணியாற்ற வாரீர்! அப் பணியேயன்றி பிற ஆரவாரங்களெல்லாம் இறுதியில் ஒன்றுமில்லாதனவாகவே முடியும்.