பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பழகன் இல்லத்தில் அடிக்கடிநான்

அண்ணாவைக் கண்ட காட்சி அன்பொழுகும் மணிமொழியார் அலுவலகத் தவனுடன்நான் அளாவும் காட்சி இன்புபெற அந்நாளில் இளந்தாடி

முகத்தானோ டினிதி ருந்து முன்பழகும் காட்சியெலாம் முன்வந்து

கண்னெதிரில் முகிழ்த்தல் கண்டேன்.

அவன்மனைக்கு நான்செல்வேன் அனைவரையும்

அருகழைப்பான் அவர்க்குக் காட்டி இவன்நமது முடியரசன் என்றென்னை இனிதுரைப்பான் அந்த அன்பை, தவழ்கின்ற முறுவலுடன் எனக்குளத்தைத்

தந்துவக்கும் எளிய பண்பை அவிழ்கின்ற உள்ளுணர்வால் தமிழ்தந்த

ஆர்வத்தால் வாழ்த்து கின்றேன்.

நீண்டதொரு பயணத்தில் நெடுத்தொலைவும்

துயர்பலவும் நீந்தி வந்தோம் தாண்டியகல் பலவெனினும் தாண்டுதற்கு

வேண்டிவை இன்னும் உண்டு -- கூண்டிலுறு பறவைக்குப் பால்பழங்கள்

கொடுப்பதனாற் பயனே இல்லை வேண்டியவான் வெளியிடத்தே பறந்துசெல

விடுதலைதான் வேண்டும் இங்கே.