பக்கம்:மனிதர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密念 ஆரம்ப கட்டத்திலேயே விஷயம் அவருக்குத் தெரிய வந்திருக்குமானால், டே பையா காதல் தேல் என்ப தெல்லாம் சகிதான். அது கல்யாணம் பண்ணுவதற்கு முந்தித்தான் வரவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. கல்யாணம் ஆன பிறகு, கல்யாணம் செய்து கொள்கிற பெண் மீதும் காதல் ஏற்படலாம். நீ காதலியை மனைவியாக மாற்ற ஆசைப்படாமல், உனக்கு வாய்த்த மனைவியைக் காதலித்து உருப்படு. சந்தோஷமாக இரு' என்று போதித்திருப்பார். வெறும் போதனையுடன் நின்று விடாமல், பணமும் நகையும் சொத்தும் சுகமுமாக வரக் கூடிய ஒரு பெண்ணையும் அவனுக்குக் கட்டிவைத்து மகிழ் வடைந்திருப்பார். ஆனால், அவர் வீட்டில் நடந்ததே அவருக்குத் தெரியா கல்ை போயிற்றே! அவருடைய தங்கை லட்சுமி அம்மாள் விதவையாகி, போக்கிடமின்றி, அண்ணனே கதி என்று நம்பி வந்து பிள்ளை அவர்களுடைய வீட்டிலேயே தங்கி விட்டாள். சமையல் வேலை முதல் சகல அலுவல்களையும் செய்து தான் அவள் வயிறு வளர்த்து வந்தாள். அவள் சூழ்ச்சி செய்து வீட்டிலே அதிகாரம் பெற்று ஆக்கினைகள் பண்ணுவதற்காகவே தன் மகளை மகிழ்வண்ண நாதனுக் குக் கல்யாணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாள் என்றே பெரிய பிள்ளை கருதினார். ஆனால் அவருடைய மகனின் பிடிவாதத்துக்கு லட்சுமி அம்மாள் தூண்டுதலுமல்ல; துணையுமல்ல. சீதை இல்லாமல் என் வாழ்க்கை வாழ்க்கையாக இராது. எனது வாழ்வில் ஒளி புகுத்தக் கூடியவள் அவள் தான்’ என்று அவன் உறுதியாக அறிவித்தபோது முதன் முதலாக அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தவள் அவள் தான். விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து விடும் என்று எனக்குத் தெரியாமல் போச்சுதே' என்று அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/64&oldid=855597" இலிருந்து மீள்விக்கப்பட்டது