பக்கம்:மனோன்மணீயம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் ஐந்தாம் களம் இடம் : அரண்மனையில் ஒரு சார். காலம் : மாலை. (ஜீவகனும் சுந்தர முனிவரும் மந்திராலோசனை) (நேரிசை ஆசிரியப்பா) சுந்தரர் வளையும் வேய்நிமிரும்; வளையா நெடுமரம் கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்! ஜீவகன் : முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம்! களைகுவர், களைகிலர் காழ்பெறுந் தருக்கள் 5. சேணுயர் தேக்கு திசையெறி சூறையில் ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும்: பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே காணுவர் காழறு" நாணமில் நாணலை? ஒருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்! 10. போரிடைப் போக்குவன்: புகழெனக் கதுவே! சுந்தரர் : பொறு பொறு! pவக! வெறுமொழி புகலேல்: அரியது செய்வதே ஆண் மையும் புகழும்! அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி. வேட்டையா ரோட்டிட வெரு வுதிக் குருவி 15. நீட்டிய தன் சிர நீள் மணற் புதைத்துத் தனதுகண் காணாத் தன் மையர் பிறரும் தனது டல் காணார் என நினை வதுபோல் என்னையிம் மயக்க மன்னவ ! உனக்கும்! சிறுபசி தாங்காச் சிறுமையா பற்பலர்; 20. அறவழி இதுவென அறியாக் கயவர்: பிறர் பொருள் வெளவியும் பிறவுயிர் கவர்ந்தும். அலையும் தீமையர் அநேகர், அகப்படின் மலைவற மரணமும் வெருவார் மான, 1. செட் டாலும் 2. வைரம் நீங்கிய 3. மயக்கந் தீர.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/180&oldid=856238" இலிருந்து மீள்விக்கப்பட்டது