இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இறைவன் உலகைப் படைத்தான். அந்த உலகில் பல உயிர்களைப் படைத்தான். அந்த உயிர்களுக்கிடையே, ஆசையென்றும் பாச மென்றும் வெறுப் பென்றும் பகை யென்றும் மாறுபாடான பல தொடர்புகளை ஏற்படுத்தி வித விதமான நாடகங்கள் நடக்கும்படி செய்துவிட்டான். உலகில் நடைபெறும் இந்த நாடகங்களைப் போன்ற ஒன்றைத்தான் எழுத்தாளனும் தன் ஆற்றலுக்கு ஏற்பச் சிறியதாகவோ பெரியதாகவோ படைக்கின்றான். அப்படி ஒர் எழுத்தாளன் படைத்த படைப்புத்தான் இந்தப் புதினம்,