இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82 மன ஊஞ்சல் போப் விட்டேன். நான்தான் ராக்கப்பன்! என்றான் அந்தப் பயங்கர மனிதன். தங்கம் பயந்தது சரியாகப் போய் விட்டது. அவன் இந்தப் பெயரைச் சொன்னவுடனே, ஆ! பிசாசு!" என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தாள். ஆனால் மூர்ச்சையடைய வில்லை. பயந்து பயந்து பழகிவிட்டதால் மயக்கம் வரவில்லை போலிருக்கிறது. ஆனால், தான் மயக்க நிலையிலேயே இன்னும் இருப் பதாகத் தான் அவள் நினைத்துக் கொண்டாள். தான் காணும் காட்சிகள் கனவாக இருக்க வேண்டும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது,