பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

.50

'இந்தாய்யா... நாக்கை அடக்கிப்பேசு. மரியாதை போயிடும்,’’ என்று ஆத்திரமாகக் கத்தி னாள் அருகிலிருந்த சடையன் மனைவி பொன்னி. உடனே பூவாயி அவளை அடக்கி சமாதானப்

படுத்தினாள்.

நாங்க என்னடி பேசறது; ஊரே பேசுது. எங்களையெல்லாம் கையாலே ஆவாத கபோ தின்னு எண்ணிக்கிட்டானா அந்த முதலாளி?? -

விஷயம் எங்கோ திசை திரும்பிப் போவதை உணர்ந்த பூவாயி சட்டென்று, 'மச்சான், அத் தப்பத்தி எல்லாம் புறவு பேசிக்கலாம். இப்போ முதல்லே நீங்கள்ளாம் அதைக் கீழே எறிஞ் சிட்டு; எங்ககூட வீட்டுக்கு வாங்க’’ என்று மிகவும் பணிவான குரலில் கூறினாள்.

'ஓ...ஹோ...! படை திரட்டிக்கிட்டுவந்து பயமுறுத்திறியா? ப ல் லு முப்பத்திரெண்டும் கழண்டு போயிடும்,' என்று ஆறுமுகம் பூவாயி யிடம் கூறிக்கொண்டிருக்கும்போதே, அருகிலிருந்த பொன்னி, ஒங்களாலே வேறே என்னய்யா செய்ய முடியும்? வயிறு முட்டக் குடிப்பீங்க. குடிச் சிட்டு வந்து பொம்பளைங்களைப் போட்டு அடிப் பீங்க. பெண்டாட்டி, பிள்ளைகனைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தோணுதா உங்களுக்கு’’’ என்று கேட்டாள்.