இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
105
இனி அவர்கள் ஆண்ட நாடு, போர் முதலியவற்றைத் திரட்டி நோக்கலாம்.
அரசன் | ஆண்ட நாடு | செய்த போர் |
அந்துவன் | (கொங்குக் கருவூர்) | (முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி மதங்கொண்டயானைமீது இவனதுகருவூரில் நுழைதல்) |
செல்வக் கடுங்கோ வாழியாதன் | (கொங்குக் கருவூர் பூழி நாடு) நேரிமலைப் பகுதி, செருப்பு மலைப் பகுதி, நறவுத் துறை முகத்தைத் சூழ்ந்த நாடு, வில்லோர் (குதிரை மலைப் பகுதி) நாடு | வேந்தர் செம்மாப்பைத் தொலைத்தான். |
பெருஞ்சேரல் இரும்பொறை | (புகார் நாட்டில் வளர்ந்தான்) பூழி நாடு | 1. கழுவுளின் காமூரைத் தீக் கிரையாக்கினான். 2. அதிய மானோடு நீர்கூரில் போரிட்டுச் சோழரையும் பாண்டியரையும் உடன் வென்றான். 3. எழினியோடு தகடூரில் போரிட்டு வென்றான் |
இளஞ்சேரல் இரும்பொறை | கொல்லிமலைப் பகுதி வானியாற்றுப்படுகை, நறவுத் துறைமுகப்பகுதி,கொங்கு நாடு, தொண்டித் துறைமுகப் பகுதி. குட்ட நாட்டுப் பகுதி, பூழிநாட்டுப்பகுதி, காட்டூரைச் சூழ்ந்த பகுதி. | 1. விச்சியோடு போர். 2. பெருஞ்சோழனோடு போர். 3. இளம்பழையன் மாறனோடு போர். |
முன் கண்ட அட்டவணையில் ஒவ்வோர் அரசரும் ஆண்ட நாட்டுப் பகுதிகளையும் அவர்கள் பிற நாட்டு அரசர்களோடு நடத்திய