உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

35

கருத்துமாக இருந்தார். அப்போது விசாகை, பிக்குவைப் பார்த்து, "இப்போது போய் வா. மாமனார் பழைய சோறு சாப்பிடுகிறார்" என்று சொன்னாள். பிக்கு போய்விட்டார். ஆனால், மாமனாருக்குக் கடுங் கோபம் வந்துவிட்டது. மருமகள் தன்னை அவமானப் படுத்தியதாக நினைத்தார். உடனே, பொங்கலையும் பாயசத்தையும் உண்ணாமல், கையை உதறிவிட்டு, பணியாளரை அழைத்து, “அடே! இதை எடுத்துவிடுங்கள். இந்தப் பெண்ணை வெளியே பிடித்துத்

தள்ளுங்கள்” என்று கூவினார்.

விசாகை பெரிய இடத்துப் பெண். இந்தச் சீமானை விடப் பன் மடங்கு செல்வத்தில் சிறந்தவர் இவள் தந்தை. ஆகவே, அவளை வெளியே துரத்த ஒருவரும் துணியவில்லை. விசாகை மாமனாரை நோக்கி,

“ஏன் மாமா நான் வீட்டை விட்டுப் போகவேண்டும்? நான் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டாள்.

'போதும், வாயை மூடு. பிச்சைக்காரன் எதிரில் என்னை அவமானப்படுத்தவில்லையா நீ, பழைய சோறு சாப்பிடுகிறேன் என்று சொல்லி, வீட்டை விட்டு வெளியே போ, அதிகப் பிரசங்கி...” என்று உறுமினார்.

66

“நான் தங்களை அவமானப்படுத்தவில்லை. உண்மையைத் தான் சொன்னேன். இதை நாலு பேர் தப்பு என்று சொன்னால் நான் வெளியே போகிறேன். யாரிடத்திலாவது சொல்லிப் பாருங்கள்.

و,

மாமனாருக்குக் கோபம் அடங்கவில்லை. ஆனாலும், சற்றுச் சிந்தித்தார். இவள் சீமான் வீட்டு மகள். வாளா விரட்டி அனுப்பிவிட முடியாது. இவள் குற்றத்தைப் பலருக்கும் தெரியும் படி கூறி அவளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். ஆகவே. ஆட்களை அனுப்பி, பஞ்சாயத்தாரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.

பஞ்சாயத்தார் வந்தார்கள். அவர்களிடம் மாமனார், மருமகளின் செய்தியை விளக்கமாகக் கூறினார். “ஒரு நல்ல நாளில் நெய்ப் பொங்கலும் பாயசமும் சுடச்சுடச் சாப்பிடும் போது, பழைய சோறு சாப்பிடுகிறேன் என்று சொல்லலாமா? அதுவும் பிச்சைக்காரனிடத்திலா சொல்வது! நான் என்ன பழைய சோறு சாப்பிடும் பரம ஏழையா? இந்த நகரத்திலேயே முதல் சீமான் நான் அல்லவா? இந்தப் பெண் என்னை இப்படி அவமானப்படுத்துவதா? என்னை என்னவென்று நினைத்