உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

153

போன்று கங்கைநீர் புரண்டோடி வந்து ஆயிரம் யோசனை ஆழ முள்ள அகழியை நிறப்பிற்று.

கங்கை, பாதாளம் வரையில் சென்று பாயவே, நாகலோகம் வெள்ளக்காடாயிற்று. நாகர்கள் அஞ்சி நடுங்கினார்கள். நாக ராசனாகிய ஜுவலனப்பிரபன், அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டதுபோல, கடுஞ்சினங் கொண்டு நாககுமாரருடன் புறப்பட்டுச் சாகரர் இடம்வந்து தீப்பொறி பறக்கும் தன் விஷக் கண்களினால், அறுபதினாயிரவரையும் விழித்துப்பார்த்தான். திருஷ்டி விஷப் பார்வையினால், சாகரர் அறுபதினாயிரவரும் எரிந்து சாம்பலாயினர்.

وو

குமாரர்கள் இறந்த செய்தியைக்கேட்ட சகர சக்கரவர்த்தி ஆற்றொணாத்துயரம் அடைந்தார். இதற்குள், அரண்மனை வாயிலில் பெருங்கூட்டமாக மக்கள் கூடி பெருங்கூச்சலிட்டழு வதைக் கேட்டு, அவர்களை அழைத்து விசாரித்தார். “சகர குமாரர்கள் கங்கையை அகழியில் திருப்பி பாய்ச்சியபடியால் அந்நீர் அகழியை நிரப்பிய தோடு மேலும் மேலும் வெள்ளப் பெருக் கெடுத்து வந்து சுற்றுப்புற நாடுகளையும் ஊர்களையும் அழித்து விட்டது. மேன் மேலும் வெள்ளம் பெருகிவருகின்றது. எங்களைக் காப்பாற்றவேண்டும் என்று அவர்கள் முறையிட்டார்கள். இதைக் கேட்ட சகர சக்கரவர்த்தி, தன்னுடைய பேரனான பகீரதனை அழைத்து, "நீ போய் தண்டரத் தினத்தின் உதவியினால், ஊரை அழிக்கும் கங்கையைக் கொண்டு போய் கடலிற் பாய்ச்சிவிட்டு வா" என்று கட்டளையிட்டார். பாட்டன் கட்டளைப்படி, பகீரதன் கயிலாய மலைக்குச் சென்று தண்ட இரத்தினத் தின் உதவியினால் கங்கையை இழுத்துக் கொண்டுபோய் கடலில் பாயச்செய்தான்.

இதுதான், திரிசஷ்டி சலாகாபுருஷர் (அறுபத்து மூன்று பெரியார்) சரித்திரம் என்னும் ஜைன நூலிலே அஜிதநாத சுவாமி சரித்திரத்திலே கூறப்படுகிற சகர சாகரர்களின் கதை. இந்தக் கதையைத்தான், மகாபலிபுரத்தில் உள்ள. சிற்ப உருவத்தில் விளக்கமாகக் காட்டப் பட்டிருக்கிறது. இனி, இந்தக்கதைக்கும் மகாபலிபுரத்துச், சிற்பத்துக்கும் உள்ள பொருத்தங்களை ஆராய்வோம்.