உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

177

இடங்களில் மத்திய கோயிலின் விமானம் தெரியாத படி மறைத்து விட்டன. அன்றியும், கோவிலுக்குள் வெளிச்சம் புகாதபடிச் செய்து, பட்டப் பகலிலும் கோயிலில் இருள் நிறைந்துவிட்டது! நமது கோயில்களில் பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்திருப்பதன் காரணம், இந்த மண்டபங்களே ஆகும்.

மாடக் கோயில்கள்

மாடக் கோயில்கள் என்றால், மாடிபோல் அமைந்த கோயில்கள் என்பது பொருள். ஒன்றின்மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளையுடைய மாடக்கோயில்களைச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இக் காலத்தில் இரண்டு நிலை, மூன்று நிலையுள்ள மாடக் கோயில்கள்தான் இருக்கின்றன. மாடக் கோயில்கள், பல்லவர் காலத்துக்கு முன்பே, அதாவது கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இருந்தன. ஆனால், அக்காலத்து மாடக்கோயில்கள் செங்கல்லினால் அமைக்கப்பட்டவை. ஆகவே அவை இக் அ இக் காலத்தில் நிலைபெற்றிருக்கவில்லை. அக்காலத்திலேயே அழிந்து விட்டன.

சீகாழிக்குக் கிழக்கே ஐந்து மைலில் உள்ள திருநாங்கூர் திருமணி மாடக் கோயிலைத் திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமொழியில் கூறுகிறார். இன்னொரு மாடக் கோயிலாகிய திருநறையூர் மாடக் கோயிலையும் திருமங்கை ஆர்வார் குறிப்பிடு கிறார். அதனைச் சோழன் செங்கணான் கட்டியதாகவும் கூறுகிறார். “செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

என்று அவர் கூறியது காண்க. திருநறையூருக்கு இப்போது நாச்சியார் கோயில் என்று பெயர் கூறுகிறார்கள்.

திருவைகல் என்னும் ஊரில் இருந்த ஒரு மாடக்கோயிலைத் திருஞானசம்பந்தர் கூறுகிறார். திருவைகல் மாடக்கோயில் என்பதே அக் கோயிலின் பெயராக இருந்தது. அதனைக் கட்டியவரும் செங்கட் சோழன் என்று ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகிறார்.

இந்த மாடக் கோயில்களைச் சோழன் செங்கணான் கட்டியதாக ஆழ்வாரும் நாயனாரும் கூறுகிறபடியினாலே இவை கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னே கட்டப்பட்டவை என்றும் இவை