உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு :

சிற்பம் - கோயில்

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1930-1980 இடைப்பட்ட காலங்களில் பல்வேறு துறைகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளார். பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளும் நூல்களும் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ், அந்ததுறை தொடர்பான அனைத்து விவரங்களையும் சேர்த்து வெளியிட்டார். மகேந்திர வர்மன் பற்றிய நூல் எனில், அம்மன்னனி வரலாறு, அவன் காலத்து இசை, சிற்பம், கட்டிடடக்கலை, கல்வெட்டுப் பதிவுகள் என்று அனைத்து விவரங்களையும் தொகுத்துக் கொடுத்திருப்பதைக் காண்கிறோம். பல்வேறு கட்டுரைகள் தொகுக்கப் படாமலும் இருந்தன. இந்நூலில் குறிப்பிட்ட பொருண்மையை அடிப்படையாகக் கொண்டு, அந்ததுறை தொடர்பான அனைத்து விவரங்களும் தொகுத்து கொடுக்கப்படுகின்றன. சிற்பம் மற்றும் கோயில் கலை தொடர்பாக மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியவை இத்தொகுதியில் இடம் பெறுகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள செய்திகளைப் பின்காணும் வகையில் தொகுக்கலாம்.

- கலைகளைப் போற்றவேண்டியதன் தேவை

- சிற்பக்கலைகள் எவ்விதம் உருவாக்கப்படுகின்றன?

- சமய மரபுகளுக்கும் சிற்பக் கலைக்கும் உள்ள தொடர்பு

- பல்வேறு தெய்வ உருவங்களின் அமைப்பு

- கோயில்களில் சிற்பங்கள் அமைக்கப்படும் முறை

- பல்லவ மன்னர்கள் காலத்து சிற்பங்கள்

அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சுமார் ஆயிரம்

ஆ ண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கலை

வடிவங்கள், இன்றைய சூழலில் சிதைந்து கொண்டிருப்பது குறித்து பெரிதும்