உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

தலையதன் உம்பர்த் தான்குறிக் கொண்ட

பாவை நோக்கத் தாரணங் கெய்தி

எனப் பெருங்கதையுட் (உஞ்சைக் காண்டம், நருமதை சம்பந்தம், 44- 48) கூறினமையாலுங் கொள்க.”

இதனால், சித்திரக் கலையைப் பற்றி 'ஓவிய நூல்' என்னும் சாத்திரம் இருந்தது என்பது தெரிகிறது.

மற்ற நாடுகளில் ஓவியக்கலை வளர்ந்திருப்பது போலவே, நம்முடைய நாட்டிலும் இக்கலை வளர்ந்திருக்கிறது. ஓவியப் பள்ளிகளும் சித்திரக்கூடங்களும் சித்திரப் போட்டிகளும் நகரங்களில் நடைபெறுகின்றன. பல துறைகளிலும் சித்திரக்கலை வளர்ந்து கொண்டிருக்கிறது. சித்திரக் கலையில் ஆர்வம் உள்ளவர் அதனை வளர்த்துச் சிறப்படைவார்களாக.