தமிழகக் கலை வரலாறு : இசை
-
ஓவியம் - அணிகலன்கள் /173
இந்தக் குடைக் கூத்துக்கு நான்கு உறுப்புக்கள் உண்டு.
குடக்கூத்து : கண்ணபிரானுடைய பேரனாகிய அநிருத்தனை வாணன் என்னும் அவுண அரசன் தன்னுடைய அரண்மனையிலே சிறை வைத்தபோது அவனைச் சிறை மீட்பதற்காகக் கண்ணன் அவுணுடைய நகரத்திற் சென்று குடங்களைக் கொண்டு ஆடியது இக்கூத்து.
66
'வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடம்”
என்பது சிலப்பதிகாரம்.
66
“காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உழை காரணமாக வாணன் சிறை வைத்தலின், அவனுடைய சோ வென்னும் நகர வீதியிற் சென்று, நிலங் கடந்த நீனிறவண்ணன் குடங்கொண்டாடிய குடக்கூத்து” என்பது அடியார்க்கு நல்லார் உரை.
குடக்கூத்துக்கு ஐந்து உறுப்புக்கள் உண்டு.
பாண்டரங்கம் : சிவபெருமான் திரிபுரத்தை எரித்துச் சாம்ப லாக்கிய பின்னர், அவருக்கு தேர்ப்பாகனாக இருந்த நான்முகன் காண ஆடியது பாண்டரங்கக் கூத்து.
"தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதியாடிய வியன்பாண் டரங்கமும்
என்பது சிலப்பதிகாரம்.
66
‘வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரிபூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட் பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதிவடிவாகிய இறைவன் வெண்ணீற்றை யணிந்தாடிய பாண்டரங்கக் கூத்து” என்பது அடியார்க்கு நல்லார்
உரை.
பாண்டரங்கக் கூத்துக்கு ஆறு உறுப்புக்கள் உண்டு.
மல்லாடல் : மல்லாடல் என்பது, கண்ணன் வாணன் என்னும் அவுணனுடன் மற்போர் செய்து அவனைக் கொன்றதைக் காட்டும் கூத்து. இதை,
66
"அவுணற் கடந்த மல்லின் ஆடல்’