உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இந்நூலில் சிற்சில இடங்களில் சில செய்திகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. இதனைக் "கூறியது கூறல்” என்னும் குற்றமாகக் கொள்ளக்கூடாது. தெளிவுபட விளக்குவதற்காக இவ்வாறு கூற வேண்டுவது அவசியமாயிற்று.

இந்நூலுக்குப் புறம்பான ஒரு செய்தியைக் கூற வாசகர் விடைதர வேண்டுகிறேன். சில செய்திகள் புதிதாக ஆராய்ந்து இந்நூலுள் கூறப்படுகின்றன. முக்கியமாகக் கோயில் கட்டிடவகை களைப் பற்றிய செய்திகளைப் குறிப்பிட விரும்புகிறேன். இது மறக்கப்பட்டு மறைந்து போன செய்தியாகும். இதனை ஆராய்ந்து முதன் முதலாக இங்குக் கூறியுள்ளேன். இச் செய்தியைப் பிற ஆசிரியர் எடுத்து எழுதலாம். ஆனால், இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்பதைத் தயவுசெய்து குறிப்பிட வேண்டும். இதை ஏன் இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், எனது “பௌத்தமும் தமிழும்” என்னும் நூலிலிருந்து சில விஷயங்களை எடுத்து எழுதிக்கொண்ட ஒருவர் அந்நூலைக் குறிப்பிடமால், தானே அவ்விஷயங்களை ஆராய்ந்து கண்டுபிடித்ததுபோல எழுதிக் கொண்டார். இவர் பொறுப்புவாய்ந்த அரசாங்க உயர்தர உத்தியோகஸ்தர்! இவரைப்போல மற்றவர்களும் செய்யக்கூடாது என்பதற்காகவே இங்கு இதனைக் குறிப்பிடவேண்டிய தாயிற்று. நூலாசிரியர் எல்லோரும் இப்படிக் களவாடுவதில்லை. ஒருசிலர் செய்கிறார்கள், என்ன செய்வது!

இந்நூலை அழகுபெறப் படங்களுடன் அச்சிட்டு வெளியிட்ட பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி உரியது.

மயிலாப்பூர்

சென்னை -4

10-04-1956.

மயிலை. சீனி. வேங்கடசாமி