தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்
பிரமராயன்
137
இடம் : மைசூர், சிட்லகட்ட தாலுகா, ஜங்கம கோட்டை, கொல்ல ஹள்ளி கிராமத்தின் வடக்கில் உள்ள பைரண்ணன் நிலத்தில் உள்ள தமிழ்ச் சாசனம்.
பதிப்பு : கர்நாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் எழுத்துச் சாசனங்கள் சிட்லகட்ட தாலுகா, எண் 9. (Eipigraphia carnatica Vol. X. (Inscriptions in Grantha and Tamil). Sidlaghatta Taluk. No. 9)
விளக்கம்: உதயமார்த்தாண்ட பிரமராயன் என்பவர், சோமீச்சுரக் கோவிலைக் கட்டி அதற்கு வேண்டிய நிலபுலங்களைத் தானம் செய்ததை இந்தச் செய்யுள் கூறுகிறது.
5
சாசனச் செய்யுள்
ஸ்வஸ்திஸ்ரீ சக வருஷம் ஆயிரத்து நாற்பத்திரண்டு.
பூமகள் புணரப் புகழது வளரப்
புவியோர் போற்ற வெங்கலி கடிந்து
செங்கோ லோச்சிப் பூமி வேந்தன்
கோழியர் குலபதி ஸ்ரீராஜ ராஜன் ஸ்ரீவிக்கிரம சோழ தேவர்க்
கியாண்டிரண் டதனில் நாரா நிகரிலி சோழமண் டலத்துக் காரார் வயல்சூழ் கைய்வர நாட்டுள் மாட மாளிகை மண்டப மோங்கிய கூட
10
வாயதல் பாகட்டூர்.
கொற்ற
. ம்
பாவையர் நடம்பயில் சூகுட் டூரில்
தொன்னில நிகழத் தருமொரு நல்குந்
தன்ம . . னருமொழிச் சதுப்பேதி மங்கலத்துப் பல்லோர் புகழும் நல்லோர் முதல்வன்
15 மாத்திரை யதனில் மாநெதி நல்கும் மாத்திரை யர்கோன் னாதுலர் சாலை பாண மாத்தும் பார்ப்பனப் பெருமாள்