உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

"என்றார்க்கு முந்துநூ லெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தன வெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழவும் அவற்று வழிநூல் செய்தார் என்றக் கால் இழுக்கென்னை யெனின், அது வேத வழக்கோடு மாறுகொள்வார் இக்காலத்துச் சொல்லினும் இறந்த காலத்துப் பிற பாசண்டிகளும் மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத் தொடு பட்ட சான்றோரும் அது கூறாரென்பது. என்னை? கடைச் சங்கத் தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர், இடைச் சங்கத்தார்க்குங் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல் காப்பியம்” என்ற ராகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் கரிபோக்கினா ராகலானும், அவர் புலவுத் துறந்த நோன் புடையா ராகலாற் பொய்கூறா ராகலானு மென்பது. இங்ஙனங் கூறாக் கால், இதுவும் மரபுவழுவென்று அஞ்சி, அகத்தியர் வழித் தோன்றிய ஆசிரிய ரெல்லாருள்ளும் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவென்பது. எங்ஙனமோவெனின்,

"

'கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்ற னாணையின் றமிழறிந் தோர்க்குக் கடனே.'

இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம்.

‘வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக

ழானாப் பெருமை யகத்திய னென்னு மருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர்

நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்’

என்பதனால் அகத்தியர் செய்த அகத்தியத்தை முதனூலெனவும், அவர் வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை யுடையா ரெனவும். அவராற் செய்யப்பட்ட முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவராயினார் தொல்காப்பியனா ரெனவும், பன்னிரு படலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப் பட்டது. இனிப் பன்னிரு படலம் முதனூலாக, வழிநூல் செய்த வெண்பா மாலை ஐயனாரிதனாரும் இது கூறினார். என்னை?