உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

என்பதையும் கல்விக்கூடங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

தொடர்ச்சியான கால வரன்முறையோ பொருள் வரன் முறையோ இந்நூலில் காணப்படுவதாகக் கூறமுடியாது. இருந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு பற்றிய முதல் பதிவாக இந்நூல் அமைகின்றது.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை - 96 ஏப்ரல் - 2010

தங்கள் வீ. அரசு

தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை

சென்னைப் பல்கலைக்கழகம்