உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

89

சென்ற நூற்றாண்டிலே வெளியான அச்சுப் புத்தகங்களின் முகப்பிலே அச்சுக் கூடத்தின் பொறுப்பாளர், அல்லது உரிமையாளர் பெயர்களும் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டன. நூலாசிரியர் பெயரைவிட அச்சுக்கூடத் தலைவர் பெயர் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டது. சில அச்சுப் புத்தகங்களில் அச்சுக் கோத்தவரின் பெயரும் அச்சிடப்பட்டன.

19-ஆம் நூற்றாண்டிலே தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளிப்படுத்திய அச்சுக் கூடங்களின் முழுப்பட்டியல் நமக்குக் கிடைக்கவில்லை. இயன்றவரையில் தேடிக் கண்டுபிடித்த பெயர் களைக் கீழே தருகிறேன்.