உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

கருத்தினை நன்குணர்ந்து அம்மணவினை எளிதில் முடிக்க வல்லோன் நடராஜனே யெனவும் உபதேசித்தகன்றார். வாணியினது காதலனாகிய நடராஜன் மேல் அவள் பிதா ஆரோபித்திருந்த அபராதங்களால் வெறுப்புக் கொண்டிருந்த பாண்டியன் அக் குரு மொழியை உட்கொள்ளாத வனாய்க் குடிலனுடைய துன்மந்திரத்தை விரும்பினன். குடிலனோ, தன்னயமே கருதுவோனாதலால், சேர தேசத்தரசன் மருமகனாக வருங்காலத்தில் தன் சுவாதந்தரியத்திற்கு எங்ஙனம் கெடுதி வருமோ என்ற அச்சத்தாலும், ஒருகால் தன் மகனாகிய பலதேவனுக்கே மனோன்மணியும் அவட்குரிய அரசாட்சியும் சித்திக்கலாகாதா என்ற பேராசையாலும் முனிவர் கூறிய மணத்தைத் தடுப்பதற்குத் துணிந்து, தொடக்கத்திற் பெண்வீட்டார் மணம்பேசிப் போதல் இழிவென்னும் வழக்கத்தைப் பாராட்டிப் புருடோத்தமன் மனக் கோள் அறிந்தே அதற்கு யத்தனிக்க வேண்டுமென்றும், அப்படி யறிதற்குப் பழைய சில விவாதங்களை மேற்கொண்டு ஒரு தூது அனுப்ப வேண்டுமென்றும், அப்போது கலியாணத்திற்குரிய சங்கதிகளையும் விசாரித்து விடலாமென்றும் ஒரு சூதுகூற அதனை அரசன் நம்பி, குடிலன்மகன் பல தேவனையே இவ்விஷயத்திற்குத் தூதுதனாக அனுப்பினான்.

சேரதேசத்திலோ புருடோத்தமன் தனக்குச் சில நாளாக நிகழ்ந்து வரும் கனாக்களில் மனோன்மணீயைக் கண்டு காமுற்று அவள் இன்னாளென வெளிப்படாமையால் மனம் புழுங்கி யாருடனேனும் போர் நேர்ந்தால் அவ் வாரவாரத்திலாயினும் தன் மனத்தைக் கொள்ளை கொள்ளும் கனாவொழியாதாவென்ற நோக்கமுடனிருக்கும் சந்தியாக இருந்தது. அதனாற் பல தேவன் சென்று தன் பிதா தனக்கு இரகசியமாகக் கற்பித்தனுப்பியபடி சேரன் சபையில் அகௌரவமான துர்வாதம் சொல்லவே புருடோத்தமன் கோபம் கொண்டு போர்க்கோலம் பூண்டு பாண்டி நாட்டின்மேற் படையெடுத்துப் புறப்பட்டான். அச் செய்தி அறிந்து ஜீவகனும் போருக்கு ஆயத்தமாகவே இருபடையும் திருநெல்வேலிக்கெதிரிலே கைகலந்தன. அப்படிப் போர் நடக்கும் போது பாண்டியன் சேனையின் ஒரு வியூகத்திற்குத் தலைவனாக இருந்த பலதேவனை அவன் கீழிருந்த ஒரு சேவகன் தன் வேலாலே தாக்க, அதனால் அவன் மூர்ச்சிக்கவும் படைமுழுதும் குழம்பவும் சங்கதி ஆயிற்று. அப்படித் தாக்கநேரிட்ட காரண மேதென்றால், பல தேவன் களவு வழிக் காமம் துய்க்கும் துன்மார்க்கனாதலால் அப்