உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே. வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றோடு காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள் உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே. தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள் கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே. வீறுகடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள் வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

45

3

4

5

6

7

8

00

9

எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.10

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி.

11

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

12

இவை பன்னிரண்டும் தாழிசை

எனவாங்கு

நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர் பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும். பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும் நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்

அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்

கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்

- தனிச்சொல்