இடம்
மனோன்மணீயம்
முதல் அங்கம்
முதற் களம்
டம் : பா : பாண்டியன் கொலுமண்டபம்.
காலம் : காலை
(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
முதற் சேவகன்:
2-ம் சே:
3-ம் சே:
4-ம் சே:
5-ம் சே:
LO
5
(நேரிசை ஆசிரியப்பா)
புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.
அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை?
ஈதோ! நோக்குதி.
அவ்விடத் திருப்பதென்?
ஆரம். பொறு! பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
6
எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்!
―
சிங்காதனம் சிங்காசனம். திகழ்தர -விளங்க. அடியினை – இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர்.