இரண்டாம் களம்
இடம் : கன்னிமாடம் காலம்: எற்பாடு
(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க)
(ஆசிரியத் தாழிசை)
மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட)
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன் அணைகில னரன்முன்னென் றாடாய் கழல் அணைந்துநீ றானானென் றாடாய் கழல்.
வாணி:
நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண் ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல்.
1
2
எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம்.
கணை அம்பு. சுடுகணை காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல்- கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து-சேர்ந்து, நீறு ஆனான்- சாம்ப லானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.)
என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற்
காண்க.)