உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

வா:

மனோ:

வா:

மனோ:

35

40

45

50

எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா? தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய அனுபவித் தன்றே அகலும்? மனையில் தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்! சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை. என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும் இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம் முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர். யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்? வார்கடல் உலகில் வாழ்கிலன்.

மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே.

முல்லையின் முகையும் முருக்கின் இதழுங் காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும்

முரண்டேன்? பலதே வனுக்கே மாலை சூடிடிற் கேடென்? காதால்

வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ எணங்கே! அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி.

நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன். இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும்

மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? ஆடவ ராகமற் றெவரையும்

நாடுமோ நானுள் வளவுமென் உளமே?

வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென வதியும் வதன மங்காய்! வாணீ!

65

8

10

66

وو

“முதலையின் பிடிபோல் இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது.

கைரவம் - ஆம்பல். முரண்டு

பிடிவாதம். வள்ளை வள்ளை

இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற. ஒருவர் - இங்கு நடராஜனைக் குறிக்கிறது.