உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

கூறுகிறார்.2 திரு. எச். கிருட்டிண சாத்திரி இவற்றை இவ்வாறு படித்துள்ளார்: இவற்றை

1. போ தி னா (ஊ) ர தா (னா)

2. கு வி ரா அ (ந) தை வெ ய அதானா

3. கு வி ரா அ ந தை வெ (ய) அ தா னா

4.தி தோ ஈல அ தா னா

5.அ ந தை அரிய

6.தி அந்தை (ஈர) வா த ன

7.மதிர (ஆ) அ ந தை (வி) ஜு வா னா

8. சா ந தா நதை சா ந தா னா

9. அ ந தை வ (எ) ந தா அ தர் னா

இவ்வாறு படித்த இவர் இதில் ‘அதானா’ என்னுஞ் சொல் ஆறு டங்களிலும் 'அந்தை என்னுஞ் சொல் ஏழு இடங்களிலும் வந்துள்ளன என்று கூறுகிறார்.

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார் :

1. பொதின் ஊர-அ தான. (பொதினூரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தானம்)

2.குவீர அந்தை வேய தான (குவீரருடைய படுக்கை. வேய் கொடுத்த தானம்)

3. திடயில்-அ-தான (திட்டையூரில் இருந்தவர் கொடுத்த தானம்) 4.அந்தை அரை தி (அரை தி என்பவரின் படுக்கை)

5.அந்தை இரவாதான் (இரவாதானின் படுக்கை)

6.மதிர அந்தை (மதிரைக்கு உரிய படுக்கை)

7. விசுவ சானதா அந்தை (விசுவன் சானதானின் படுக்கை)

8. சானதான் அந்தை (சானதானின் படுக்கை)

9. வேன தா-அ-தான (வேனதானின் தானம்)