உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

உரையும்பாட்டுந் தளர்வெய்தி யுடம்புமூத்த போதின்கண் நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர் நமர்க ளாதலால் வரைகொள் பெண்ணைவந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் விரைகொள் சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே. 14

கண்காட்டும் நுதலானும் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டிலுறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

15