304
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6
ஆகவே, சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருப்பதிகங்களில் பெரும் பாலும் மறைந்து விட்டன. எஞ்சியுள்ள நூறு தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் வெள்ளி யம்பலத் தம்பிரான் என்பவர் காரோணப் பதிகம் ஒன்றை இயற்றி இடைச் செருகலாக இதனுடன் சேர்த்து விட்டார். அப்பதிகத்தைப் பின் இணைப்பில் காண்க.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் அக்காலத்து இயற்றமி ழாகவும் இசைத்தமிழாகவும் விளங்குகிறது.
திருமுகப்பாசுரம்
மதுரையில் கோயில் கொண்டருளிய சொங்கலிங்கப் பெருமா னுக்குத் திரு ஆலவாய் உடையார் என்னும் பெயரும் உண்டு. இவர் தமது அடியாராகிய பாணபத்திரன் பொருட்டுச் சேரமான் பெருமாள் நாயனாருக்கு ஒரு திருமுகப் பாசுரம் எழுதியனுப்பினார் என்று புராணங்கள் கூறுகின்றன.
66
'அதிர் கழல் உதியர் வேந்தற்கு
66
அருள்செய்த பெருமையாலே
எதிரில் செல்வத்துக் கேற்ற
இருநிதி கொடுக் என்று
மதிமலிபுரிசை என்னும்
வாசகம்வரைந்த வாய்மைக்
கதிரொளி விரிந்த தோட்டுத்
திருமுகம் கொடுத்தார் காண.
9910
'விதமுறு தனங்கள் மிக்க வேண்டுப அளிப்பன் தாழாது அதர்வுற விரைவற் சென்றிவ் ஓலையைஅளித்தி என்று மதிமலி புரிசை என்றோர் வரைதரு திருமுகத்தை முதர்தரு கனவிற்காணக் கொடுத்தனன் முக்கட் சொக்கன்
“மறைக்குரை செய்த வாக்கான்
மதிமலிபுரிசை என்னும்
சிறப்பியல் சீர்சால் செய்யுட்
பாசுரம் செப்பித் தீட்டிப்
2911