338
66
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6
'ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு.
என்னும் திருக்குறளைப் பின்பற்றியுள்ளது காண்க.
இன்று ளார்நாளை யில்லை யெனும் பொருள் ஒன்று மோராது உழிதரு மூமர்காள்!”
என்னும் இப்பாடல்,
66
(திருக்காட்டுப்பள்ளி, 9)
‘நெருநல் உள்னொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
99
என்னும் திருக்குறளை நினைவுறுத்துகிறது.
2. சில மீன்களின் பெயர்கள்
திருநாவுக்கரசர் தம் பாடல்களில் சில மீன்களின் பெயர்களைக்
கூறுகிறார். அவையாவன :
66
“முடங்கு இறால் முதுநீர் மலங்கு இளவாளை செங்கயல் சேல்
66
வரால் கெளிறு,
அடைந்த தண் கழனி
அணியாரூர்.....
'மாட்டில் நீர் வாளைபாயும் மல்கு சிற்றம்பலம்.
வண்டு கொப்புளித்த தீந்தேன் வரிக் கயல் பருகி மாந்தக்
கெண்டை கொப்புளித்த தெண்ணீர்க் கெடிலம்.
66
“வரிவரால் உகளுந் தெண்ணீர்க் கழனிசூழ் பழனவேலி யரிவரால் வயல்கள் சூழ்ந்த வதிககை வீரட்டம்.
"மடுக்களில் வாளைபாயும் திரு வையாறு.
""
செய் வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறை. “மடுக்களில் வாளை பாய வண்டினமிரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணை வரால்கள்.
99