உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

விருந்தினனாக வந்திருக்கும் அரசகுமரன். கணிகைப்பெண்ணை நாடிப் போக இயலுமா? கணிகைப்பெண் அரசகுமரனாகிய விருந் தினனைத் தேடிவர முடியுமா? சிலநாட்கள் சென்றன.

ஒருநாள் மாலைநேரத்தில் தேசிகப்பாவை பொழுதுபோக்காகத் தன்னந் தனியே அரண்மனைப் பூங்காவில் ஓரிடத்தில் அமர்ந்து விணை வாசித்துக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் சீவககுமரன் அப் பூங்காவில் இன்னொரு இடத்தில் உலாவிக்கொண்டிருந்தான். அப்போது வீணையின் இன்னிசையைக் கேட்டு அவ்விசை வந்த திசையை நோக்கி வந்தான். வந்தவன் எதிர்பாரா வண்ணம் தேசிகப் பாவையைக் கண்டு வியப்படைந்தான். அவளும் அவனைக் கண்டு வியப்படைந்தாள். முன்னமே நாடக அரங்கில் அவர்கள் ஒருவரை யொருவர் விரும்பியவராகையால் இந்தச் சந்திப்பில் அவர்கள் மனமொத்த நண்பர்களாகவும் காதலராகவும் ஆனார்கள். பின்னர் அவர்கள் நாள்தோறும் சந்தித்தார்க்ள.

சில நாட்கள் சென்றபிறகு சீவககுமரன் தன்னுடைய நாட்டுக்குப் போய்விட்டான். சில மாதங்கள் வரையில் அவனைப்பற்றின செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. அவள் பொறுமையாகக் காத்திருந்தாள். பல மாதங்கள் சென்றன. கடைசியில் சீவககுமாரனைப்பற்றி அரண்மனை யில் பேசிக்கொண்டதை அவள் அறித்தாள். சீவககுமரன் கட்டியங் காரனோடு போர்செய்து வென்று தன்னுடைய இராச்சியத்தை மீட்டுக் கொண்டான். இப்போது அவன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு முடி சூடி அரசாள்கிறான் என்று அவர்கள் பேசிக்கொண்டதை அவள் அறிந்தாள் தேசிகப்பாவை மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாள். தன்னைக் காதலித்த அவன் தன்னை அழைத்துக் கொள்வான் என்று அவள் காந்திருந்தாள். நாட்கள் கழிந்தன. மாதங்கள் சென்றன. ஆண்டு கடந்தது. அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை அழைத்துக் கொள்ளும் குறி ஒன்றும் காணப்படவில்லை. அவள் நெடுநாள் காத்துக் கொண்டிருந்தாள்.

தேசிகப்பாவை தனக்குள் எண்ணினாள். சீவக்குமரன் ஏமாங்கத நாட்டின் மன்னனாக முடிசூடிச் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாள் கிறாள். பட்டம் பதவி அரச போகங்கள் செல்வம் அதிகாரம் இவை களில் மூழ்கியிருக்கிறான். அதனால் அவன் என்னை மறந்துவிட்டான். அன்றியும் அவன் அரசகுலத்தில் பிறந்தவன். நானோ கணிகை குலத்தில் பிறந்தவள். சப்பி உமிழப்பட்ட மாங்கொட்டையைப்போல