132
மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7
செய்து உறையூரை அழித்தார் என்று பிற்காலத்தில் எழுதப்பட்ட செவ்வந்திப் புராணம் என்னும் மற்றொரு சைவ நூல் கூறுகிறது.92 இதனை அழித்தது சமணர் ஆயினும் ஆகுக; சைவர் ஆயினும் ஆகுக; இவ்வூர் பிற்காலத்தில் மண்மாரியால் அழிக்கப்பட்ட தென்பது தெரிகிறது. இவ்வூர் அழிந்தபிறகு, திருச்சிராப்பள்ளி சோழரின் தலைநகராயிற்று என்பர்.
வெள்ளனூர் :
திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் வயலில் கல்லினால் அமைக்கப்பட்ட சமணத் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன; (Arch. Rep; 1909-1910)
பழநாகப்பள்ளி :
கரூர் தாலுகா நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழ தேவர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், பழநாகப்பள்ளிக் கோயிலுக்குத் திருவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.3 இதில் குறிக்கப்பட்ட பழநாகப்பள்ளி என்பது சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை. இதனால் இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.
அமுதமொழிப் பெரும்பள்ளி :
I
திருச்சி தாலுகா அன்பில் என்னும் ஊரில் உள்ள சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி இராசராச சோழ தேவரது 19ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், 'திருவிடைக்குடி அமுத மொழிப் பெரும் பள்ளி' என்னும் சமணக் கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.94
புலிவல்லம் :
திருச்சி தாலுகா திருப்பாலைத் துறை தாருகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனங்களில் 'புலிவல்லத்து ஊரிடைப் பள்ளிச் சந்தம்' கூறப்படுகிறது.5 இதனால், சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இங்கிருந்தது அறியப்படும்.
அமண்குடி :
திருச்சி தாலுகா திருச்செந்துறையில் உள்ள சந்திரசேகரர் கோயில் சாசனம், மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மரது