தமிழகச் சமயங்கள் - சமணம்
ல்
-
167
என்று வழங்கப்பட்டதென்றும், இங்குப் பவணந்தி முனிவர் வாழ்ந் திருந்து நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றினார் என்றும் கூறுவர். பவணந்தி முனிவரின் சனகாபுரம் இது அன்று என்றும் அது வேறு ஊர் என்றும் வேறுசிலர் கருதுவர். (செந்தமிழ் 5 ஆம் தொகுதி காண்க)
மேட்டுப்புத்தூர் :
ஈரோடு தாலுகாவில் உள்ளது. இங்கு ஒரு சமணக் கோயில் இருக்கிறது.
209
மகாபலிபுரம் :
இது சமணர் திருப்பதி அன்று. ஆனால், இங்குள்ள சிற்பங்களில் ஒன்று, அஜிதநாத தீர்த்தங்கரர் புராணத்தில் கூறப்படுகிற சகர சாகரர்களின் கதையைக் காட்டுகிறது. இந்தச் சிற்பத்திற்கு இப்போது “அர்ச்சுணன் தபசு” என்று தவறாகப் பெயர் கூறுகிறார்கள். சகர குமாரர்கள் கயிலாய மலையைச் சூழ்ந்து அகழி தோண்டி அதில் கங்கையாற்றைப் பாய்ச்ச அது வெள்ளம் புரண்டோடி வெள்ளத்தினால் நாடுகளை அழிக்க, பகீரதன் அந்தக் கங்கயிைன் வெள்ளத்தைக் கடலில் காண்டுபோய்விட்டான். இக்கதையை வெகு அழகாக இங்குச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பத்தைப்பற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகாபலிபுரத்து ஜைன சிற்பம் என்னும் நூலில் விரிவாகக் காணலாம். இந்நூல் வேதாரணியம் திரு. A.J. அனந்தராஜய்யன் அவர்களால் அச்சிடப்பட்டுள்ளது. மகாபலி புரத்திலே பல்லவ அரசர் காலத்திலே அமைக்கப்பட்டபடியால், அக்காலத்தில் இந்தச் சமண சமயக்கதை எல்லோராலும் நன்கு அறியப்பட்டிருந்ததென்பது தெரிகிறது. இதனால் அக்காலத்தில் சமண சமயக்கொள்கைகள் நாட்டில் பெரிதும் பரவியிருந்தன என்பதும் விளங்குகிறது.