தமிழகச் சமயங்கள் - பௌத்தம்
திருதராட்டிரன்:
193
இவன் கிழக்குத் திசைக்குத் தெய்வம். இவன் கந்தர்வர்களுக்கு
அரசன்.
விரூதாட்சன்:
இவன் தெற்குத் திசைக்குத் தெய்வம். இவன் கும்பாண்டர் களுக்கு அரசன்.
விருளாட்சன்:
இவன் மேற்குத் திசைக்குத் தெய்வம். இவன் இயக்கருக்கு
அரசன்.
வைசிரவணன்:
இவன் வடக்குத் திசைக்குத் தெய்வம். இவன் நாகர்களுக்கு
அரசன்.
இந்த நான்கு தெய்வங்களும் சக்கனுக்கு (இந்திரனுக்கு) அடக்க மானவர்கள் என்பதும், உலகத்திலே நான்கு திசைகளிலும் நிகழ்கிற எல்லாச் செய்திகளையும் இவர்கள் அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கிறார்கள் என்பதும் பௌத்தர்களின் நம்பிக்கை.
5. சக்கன்
சக்கன் என்னும் சக்கரன் விண்ணுலகத்துக்கு அரசன். இவனை இந்திரன் என்றும் கூறலாம். இவன் பெளத்தச் சிறு தெய்வங்களுக் கெல்லாம் தலைவன். இவன் பௌத்த தர்மப்படி நடக்கிற நல்லவர் களுக்கு உதவி செய்கிறான் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை. இவன், விண்ணுலகத்திலே சிம்மாசனத்தில்மேல் விரிக்கப்பட்ட பாண்டுக் கம்பளத்தின்மேல் அமர்ந்திருக்கிறான் என்றும், ஏதேனும் சிறப்பான நிகழ்ச்சிகள் உலகத்தில் நிகழுமானால் இவனுடைய பாண்டுக் கம்பளம் சூடுகொள்ளும் என்றும், அப்போது இவன் அந்நிகழ்ச்சிகளை அறிந்து கொள்கிறான் என்று பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்திரனைப் பற்றிய பல கதைகள் பௌத்த நூல்களிலே கூறப்படுகின்றன. இந்தச் சக்கர னாகிய இந்திரன் வேறு; வைதீக மதத்தில் கூறப்படுகிற இந்திரன் வேறு.