உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

7

சீனிவேங்கடசாமி அவர்கள் பதிவு செய்துள்ளதைக் காண்கிறோம். தமிழில் பாலி மொழியின் செல்வாக்கு உருவானதற்கும் பௌத்தத்திற்கும் உள்ள உறவு குறித்தும் ஆய்வு செய்துள்ளார். மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் இந்நூல் தமிழில் முதன்முதல் பௌத்தம் தொடர்பான விரிவான பதிவைச் செய்ததாகும்.

மேற்குறித்த நூலைத்தவிர மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் எழுதிய பௌத்த மதம் தொடர்பான பல்வேறு கட்டுரைகள் இத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை 96 ஏப்ரல் 2010

தங்கள் வீ. அரசு

தமிழ்ப் பேராசிரியர்

தமிழ் இலக்கியத்துறை

சென்னைப் பல்கலைக் கழகம்