உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை

37

சாக்கிய குமாரர்கள் எல்லோரும் களத்திற்கு வந்தார்கள். சித்தார்த்த குமாரனும் வந்தார்; சுத்தோதன அரசரும் வந்தார். வேடிக்கை பார்ப்பதற்கு நாட்டிலுள்ள எல்லோரும் வந்திருந்தார்கள்.

மகாநாமர் தமது மகள் யசோதரையை அழைத்து வந்து உயரமான மேடைமேல் அமரச் செய்தார். “படைக் கலப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறாரோ, அவருக்கு யசோதரையை மணம் செய்து கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.

இப் படைக்கலப் போட்டிக்குச் சகாதேவர் என்பவர் நடு நிலை யாளராக நியமிக்கப்பட்டார். முதலில் அம்பு எய்யும் போட்டி நடந்தது. அதாவது, நெடுந்தூரம் அம்பு எய்யும் போட்டி. ஆனந்தன் என்பவர் இரண்டு குரோச தூரத்திலும், நந்தன் ஆறு குரோச தூரத்திலும், மற்றொருவர் எட்டுக் குரோச தூரத்திலும், சித்தார்த்த குமாரன் பத்துக் குரோச தூரத்திலும், அம்பு எய்வதற்குக் குறிகளை ஏற்படுத்தினார்கள். பிறகு இவர்கள் எல்லோரும் வில்லை வளைத்து அம்பு எய்தார்கள். அவரவர்கள் வைத்த குறி வரையில் அவரவர்கள் அம்பு எய்தனர்.

சித்தார்த்த குமாரன் முறை வந்தபோது, அவரிடம் வில்லைக் கொடுத்தார்கள். குறியை எய்வதற்கு முன்பு வில்லைச் சோதிப் பதற்காகக் குமாரன் வில்லை வளைத்தார். அது ஒடிந்து போயிற்று. அப்போது அவர், “வேறு நல்லவில் இங்கே இல்லையா” என்று கேட்டார்.

சுத்தோதன அரசர், “இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன்

கூறினார்.

“எங்கே அதை எனக்குக் கொடுங்கள்” என்றார் குமாரன்.

“உன்னுடைய பாட்டன் சிம்மஹணு அரசனுடைய வில் ஒன்று உண்டு. அதை ஒருவரும் வளைக்க முடியாதபடியால் அது கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறி அதைக் கொண்டுவந்து கொடுங்கள் என்று ஏவலாளருக்குக் கட்டளையிட்டார் சுத்தோதன அரசர்.

உடனே ஏவலாளர் விரைந்து சென்று அந்த வில்லைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். சித்தார்த்த குமாரன் அதனைக் கையில் வாங்கி நாணைப்பூட்டி அம்பு தொடுத்துக் குறி பார்த்து வில்லை வளைத்து அவ்வம்பை எய்தார். பத்துக் குரோசத்துக் கப்பால் இருந்த குறியில்