பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

53




எந்த ஓர் உண்மைக்கும் எதிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்? ஏனென்றால், தனக்குத் தெரியாததை எவன்தான் தெரியாது என்று வெளிப்படையாகக் கூறுவான்?

வக்கிர குண மருத்துவர்கள்

நாளாகவாக, மருத்துவர்கள் மனம் மாறினார்கள். ஜோசப் லிஸ்டரின் முறையைப் பின் பற்றினார்கள். அவ்வாறிருந்தும், அழுக்காறு குணமுடைய ஒரு சிலர் மட்டும் லிஸ்டரின் சிகிச்சை முறையைக் கிண்டலும் - கேலியும் செய்து பின்பற்ற மறுத்து விட்டார்கள்.

லிஸ்டரின் ஆராய்ச்சித் திறமை உலகெலாம் பரவிப் புகழை உருவாக்கியது. உலக மருத்துவர்களில் பெரும்பாலோர், ஜோசப் லிஸ்டரின் அறுவை சிகிச்சையைப் பின்பற்றி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினார்கள்.

ஆனால், சிலர் லிஸ்டர் திட்டத்தை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார்கள். புகழில் தோற்றார்கள்!

எடின்பர்க் மருத்துவத் துறையில் ஜோசப் லிஸ்டர் 1867-ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதற்குத் தகுதியானவர் அவர்தான் என்பதை அன்றைய மருத்துவ உலகமும் உறுதிப்படுத்தியது

அரசு மருத்துவர் பதவி நியமனம்

எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியராக லிஸ்டர் நியமனமான பின்பு, அவருடன் பணியாற்றிட பலர் விரும்பினார்கள். அவர்களுள் லிஸ்டருடன் படித்தவர்களே அதிகம் பேர் இருந்தார்கள்.

இங்கிலாந்து அரசியார் ஜோசப் லிஸ்டரை அழைத்து அரசு மருத்துவர் பதவியை வழங்கியதோடு, அரசியின் நேர்முக மருத்துவராகவும் அமர்த்தப்பட்டார்.

இவ்வளவு மதிப்பும், மரியாதையும் உருவானதற்குப் பிறகும் கூட, லிஸ்டரின் மருத்துவ முறைக்கு எதிர்ப்பு ஊமைக்