உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மாமி அரசியற் படலம்

வர்கதை இவ்வா றாக, இனிஎன்
மாமி கதையை வகுப்பேன் கேளும்.
அரங்கு பூட்டாம், அறைப்புரை பூட்டாம்,
தட்டுப் பூட்டாம், சாய்ப்புப் பூட்டாம்;[1]
அரிசியை நிதமும் அளந்து வைப்பாள், 5
நல்ல மிளகை நறுக்கி வைப்பாள்.
கொல்ல மிளகைக்[2] குறுக்கி வைப்பாள்,
உப்பில் புளியை உருட்டி வைப்பாள்,
கறிக்குத் தேங்காய் கருக்கி வைப்பாள்,
கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்; 10
தீபா வளிக்குத் தீபா வளியே
எண்ணெ யறியும் என்தலை. அம்மா!
அரைக்க மஞ்சள் அளித்திடா மாமி
குளிக்க மஞ்சள் கொடுத்திடு வாளோ?
உம்மே லாணை, ஒருநா ளாகிலும் 15
கஞ்சியோ கூழோ காடி நீரோ
கும்பி யாரக் குடித்ததே யில்லை;
கந்தைத் துணிகள் கட்டின தல்லால்,


  1. 3-4. அரங்கு, அறைப்புரை, தட்டு, சாய்ப்பு: வீட்டில்
    பாகங்கள்.
  2. 7. கொல்லமிளகு-மிளகாய் வற்றல், நன்றாய் பழுத்துக்
    காய்ந்த வற்றல் மிளகு.