இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
146
"திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகட்குமுன் திருவள்ளுவர் பிறந்தார்" என்பது அடிகளார் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.
இந்நூலைப் பற்றிய குறிப்புரை...
சாற்சுருக்கம், பொருட்பெருக்கம், அமைப்பு அருமை ஆகியன கொண்ட திருக்குறளின் நூற் பெருமை, நூல்நுதலிய பொருள் ஆகியவற்றையும் ஆக்கியோன் வரலாறு, ஆசிரியர் காலம், ஆசிரியர் மதம் ஆகிய பிற செய்திகளையும் அடிகளார் ஆராய்ந் துள்ளார்.
கால்லாமை, ஒழுக்கமேன்மை, கல்வி, முழுமுதற் கடவுளுண்மை ஆகிய குறள் நெறிகளை நூற்பெருமைகளில் வியந்து கூறியுள்ளார் அடிகளார்
- நா. செயப்பிரகாசு
மறைமலையடிகளாரின்
இலக்கியப் படைப்புகள்