உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்ற நூற்றாண்டின் இறுதியில், இந்த நூற்றாண்டின்

தொடக்கத்தில் இரண்டு நூற்றாண்டுக்கும் ஒரு பேரொளியாய் தமிழ் வானத்தில் சுடர்விட்ட ஒரு முளையிள ஞாயிறு எந்தம் அடிகளார். அவர்க்கு அச்சம் தெரியாது. இச்சகம் பேச மாட்டார். ஆங்கிலம், ஆரியம், தீந்தமிழ் என்ற மூன்றையும் துறைபோக முற்றக் கற்ற ஒரு மூதறிஞர். மும்மொழிகளையும் ஒருசேர இவ்வாறு தமிழுலகில் மாசறக் கற்ற நல்லாசிரியர் இவர்க்கு முன்னுமில்லை, பின்னுமில்லை. இது தமிழ் வரலாறு.

வடமொழியும், தமிழும் வேறு வேறு என்பதை விளக்கிக் காட்டினார் ஆசிரியர் சிவஞான முனிவர் (18-ஆம் நூற்றாண்டு) 'வட மொழியை அறவே அகற்றிவிட்டுத் தமிழ் தனித்து இயங்க வல்லது என்பதை ஆராய்ந்து சொன்னார் டாக்டர் கால்டுவெல் (19-ஆம் நூற்றாண்டு)' அவ்வாறு பல்லாயிரம் ஏடுகள் தமிழில் எழுதிக் காட்டினார் ஆசிரியர் மறைமலையடிகள் (20-ஆம் +நூற்றாண்டு). அடிகளார் ஏற்றிய விளக்கு இன்னும் எரிகின்றது. அடிகளார் மறைந்த அத்திசை நோக்கி எந்தலை தாழ்வதாக!

- வித்துவான் அ. கிருட்டிணமூர்த்தி

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600017

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/330&oldid=1579956" இலிருந்து மீள்விக்கப்பட்டது