உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

207

இருபது தமிழ்ச் சொல்லுமாக எழுதினால் பேசினால், தமிழ் எப்படிப் பிழைத்தல் கூடும்? வடமொழி பயிலவேண்டாம் என்று யான் கூறவில்லை.மகிழ்வுடன் பயிலுங்கள்; யானும் பயில்கின்றேன். ஆனால் அன்பர்களே தமிழ்த் தாயைக்கொல்லாதீர்கள். தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். அடியேன் உங்களைப் பெரிதும் கெஞ்சுகிறேன். ஆண்டவர்களே தமிழைக் கெடுக்காதீர்கள். தனித் தமிழுக்குப் பாடுபடுங்கள் என்றார். அவை பெரிதும் கைதட்டி வரவேற்றது.

பண்டைப் புலவராயினும், இக்காலத்தவராயினும் மற்று எவராயினும் தமிழுக்குக் கேடு விளைத்தோரை, விளைப்போரை ஒரு பொருளாகக் கருதமாட்டேன். பழம் பெரும் புலவர் ஒருவர் ஒரு வடசொல் வழங்கியிருந்தால் பிற்காலத்தில் நூறு சொற்களை வழங்குகிறார். நாம் நூறாயிரம் சொற்களை வழங்குகின்றோம். பெரும் கடனாளியாகின்றோம்.

சங்கத் தமிழ் வழக்கை இடைக்காலத்தவர் பின்பற்றி யிருந்தால் அவர்களுக்குப் புகழ் உண்டு. இடையில் வந்து தமிழைக் கெடுத்தவர்களை நான் ஒருநாளும் பொருட்படுத்தேன். தமிழிற் பிறமொழிக் கலப்பை வெறுத்துத் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள் வல்லோசைகளைப் பெருக்காதீர்கள். தமிழர் ஆரியத்திற்கு அடிமைபட்டு அச்சொற்களைத் தமிழிற் கலத்தல் தீங்கே. இவ்வடி மைத்தனத்தில் நின்றும் முதலில் விடுபடுங்கள். இது முதலிற் பெறவேண்டிய விடுதலை (சுயராச்சியம்) (நீண்ட நேரம் கைதட்டி அவை வரவேற்றது). மேலும் அடிகள் உணர்ச்சி மீக்கூரப் பேசினார். கதிரேசனார், யான் தனித் தமிழ் உணர்ச்சியைப் பற்றிக் குறைகூறவில்லை" என்றார். எங்களைப் போன்ற பெருந் தமிழ்ப் புலவர்களின் உதவியில்லாமல் தனித்தமிழ் வளரமுடியுமா? தாங்கள் பெரும் புலவர். தாங்கள் அப்படிப் பேசியதனால்தான் எனக்குப் பெருவருத்தம் உண்டானது. மற்றவர்கள் தனித்தமிழுக்கு மாறாகச் சொன்னால் எனக்கு இவ்வளவு கவலை ஏற்பட்டிராது” என்றார் அடிகள். பின்னர்ப் பண்டிதமணி, அடிகள் நேற்று பேசிய திலிருந்து தனித்தமிழைப் பற்றி எனக்கு இருந்த அரைகுறையான ஐயங்கள் அடியோடு அகன்று விட்டன. நம் பெரியோர்கள் வடசொற்களைத் தமிழிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/240&oldid=1580197" இலிருந்து மீள்விக்கப்பட்டது