தமிழே வாழ்வாகவும் வழிகாட்டியாகவும் கொண்டு வாழ்ந்து மறைந்தவர் தமிழ் மலையாம் மறைமலை அடிகளார். தமிழின் சீர்மையையும், தொன்மையையும் வன்மையையும் வளத்தையும் வாழ்வையும் உலகறியச் செய்த பெருமை அடிகளைச் சாரும்.
- நெ.து. சுந்தரவடிவேலு
மறைமலையடிகள் அருளிச் செய்த நூல்களின் உண்மையும், அவற்றின் வாயிலாக அறிய வேண்டி நிற்கும் முற்கால, பிற்கால நூல்களின் உண்மையும், சைவம், வைணவம், பௌத்தம், சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங் களிற் காலங்கடோறும் புகுந்த புராணக் கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் தமிழ்மொழி தனித்தமிழுங் கலப்புத் தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் நின்ற அரசியல்களின் உண்மையும், அவ்வக் காலங்களில் திரிபெய்தி வந்த ஒழுக்கங்களின் உண்மையும் தெளிவுறுத்தி நிற்கிறது.
- டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
உழை
உயர்
உதவு
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 600 017
தமிழ்மண் தொலைபேசி : 044 24339030