உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

9

என்றருருளிச்செய்த சிவஞான சித்தித்திருவாக்கான் நன்கறியப்

படும்.

பட்ட

மேற்கூறியவாற்றால், ஆன்மாப் பஞ்சேந்திரியங்களை விடயிக்குங் காலத்துச் சத்தத்தை யறியுஞ் சமயமும், பரிசத்தை யறியுஞ் சமயமும், ரூபத்தை யறியுஞ் சமயமும், இரசத்தை யறியுஞ்சமயமும், கந்தத்தை யறியுஞ் சமயமும் தனித்தனியே நிகழா நிற்கின்றன. இனி இப்பஞ்சேந்திரிய உணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கு உள்வழியும் ஆன்மாக்கள் ஒரு சிலர்க்கு ஏனை இந்திரிய உணர்வுகளினுங் கந்த உணர்விற் பிரியம் மிகுதி யுண்டாய்ப் பலவகைப்பட்ட நறிய வாசனைகளை அனுபவித்தலிலே இன்பஞ் செல்லும்; அவர் அக்கந்த உணர்வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். வேறு சிலர்க்கு இரசவுணர்விற் பிரியமிகுதி யுண்டாய்த் தித்திப்புப் புளிப்புக் கார்ப்புக் காழ்ப்புக்கைப்பு உவர்ப்பு என்னும் அறுவகைப் உணவுகளைப் பலதிறத்தாற் பாகஞ் செய்து சுவைத்தலிலே இன்பம் செல்லும்; அவர் சுவை யுணர்வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். இவ்வாறே சிலர்க்கு ரூப வுணர்விலும் சிலர்க்குப் பரிசவுணர் விலும் சிலர்க்குச் சத்த வுணர்விலும் மிகுதியும் பிரியமுண்டாய் மற்றை யுணர்வுகளை யிழித்துப் பேசுவர். இங்ஙனம் அவரவர் தத்தமக்கியைந்தவற்றை மிகவும் பாராட்டி அவ்வவற்றையே உயர்த்துப் பேசுவது அவசரபேதம் அல்லது சமயபேதம் என்று தெளியப்படும். இனி "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற திருவாக்கின்படி இப்பஞ் சேந்திரிய வுணர்வுகளுள்ளும் இயற்கையிலே மிகச் சிறந்ததியாது? என்று நியாய நெறியால் விசாரணை செய்யப் புகுவானுக்குச் சத்த வுணர்வே சிறந்த தென்பது இனிது விளங்கும். சீவான்மாவின் ஏகதேவ ஞானத்தை விரிவுசெய்து விளக்குதற்கு இன்றி யமையாது வேண்டப்படும் ஞானநூற் கேள்விகளெல்லாம் செவிக்கருவி யினையே துணையாய்க் கொண்டு நடைபெறு கின்றனவாகலின் அச்செவிக் கருவியினுள்ளமைந்த சத்த வுணர்வே மற்றை யிந்திரிய வுணர்வுகளினெல்லாம் சிறந்த தென்று துணியப்படும். இது பற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/42&oldid=1583094" இலிருந்து மீள்விக்கப்பட்டது