உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

❖ - 15 மறைமலையம் – 15

யென்பார் ‘தத்துவங்கடந்த பொருள்’ என்றும், உருவுடைப் பொருளெல்லாம் அனித்தமாகலின் சிருட்டிக் கப்படும் உருவு டைப் பொருளன்று அக்கந்தழி யென்பார் 'அருவாய்' என்றும், இம்முப்பத்தாறு தத்துவங்களும் அப்பரம் பொருளையின்றி இயங்க மாட்டாவாகலின் அவற்றுள் நின்று அவற்றைச் சேட்டித்தும் தான் தாக்கற்று நிற்குமென்பார் ‘ஒரு பற்றுமற்று’ என்றும் புலவர் பெருமான் நச்சினார்க்கினியர் இனிது விளக்கி யருளினார். இவரு தாரண மெடுத்துக் காட்டிய திருவாசகத் திருவாக்கு இக் கந்தழியாம் பரம் பொருளியல்பை விளக்குமாறு யாங்ஙன மெனில்;- ‘உற்ற வாக்கையில் உறுபொருள்' என்பது இறைவன் தத்துவங்களுள் அருவாய் நிற்றற்கும், ‘நறு மலரெழு தரு நாற்றம்' என்பது அவன் சீவான்மாவினுள் அருவுருவாய் நிற்றற்கும் உவமை களாய் எழுந்தன. சரீரத்தி னுள்ளிருக்கும் உயிர் தனக்கென ஓர் உருவின்றித் தான் சார்ந்த சரீரமே தனக் குருவாய்க் கொண்டு நிற்கின்றது. அங்ஙனம் நிற்குமிடத்துத் தான் வேறு உயிர் வேறு என்னும் பேதந் தோன்றாவாறு சாத்தா, கொற்றா என்னும் உடம்புக்கிட்ட பெயரால் அழைத்தவழித் தான் ஏன் என்கின்றது. அங்ஙனம் நிற்பினும் உடம்பு உடம்பே, உயிர் உயிரே, உடம்பு உயிராகாது, உயிர் உடம்புமாய் அதனின் வேறுமாய் நிற்கும். உடம்பு தானே இயங்காது உயிர் இயக்கி னால் இயங்கும், உயிர்தானே யியங்கும் உடம்பினையும் இயக்கும். இதுபோல இறைவன் பிரபஞ்சங்களுட் கலந்து நிற்கும்வழித் தான் வேறு உலகம் வேறு என்னும் பேதந் தோன்றாவாறு அபேதமாய் நிற்கும். இவ்வாறு அபேதமாய் நிற்றல் பற்றியே 'விசுவம் பிரம்மா’ என்னும் வாக்கியமும்,“உலகேழெனத் திசை பத்தெனத்தா னொருவனுமே, பலவாகி நின்றவாதோ ணோக்கமாடாமோ" என்னுந் திரவிடோப நிடதத் திருவாக்கும் எழுந்தன. இங்ஙனம் அபேதமாய் நிற்பினும் இறைவன் இறைவனே, உலகம் உலகமே; உலகமிறைவனாகாது, இறைவன் உலகமுமாய் அவற்றின் வேறுமாய் நிற்பன்.

உலகம்தானே இயங்காது இறைவன் றைவன் இயக்கினால் இயங்கும்; இறைவன் தானேயும் இயங்குவன் பிறவற்றையும் இயக்குவன். இங்ஙன மெல்லாம் அபேதவொற்றுமை பூண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/49&oldid=1583101" இலிருந்து மீள்விக்கப்பட்டது