உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 4

மறைமலையடிகளின் தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும்

மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறை போகாதும் காத்தது. தமிழின் 'வயிற்றிலிருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாட நூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒரு சார் இளைஞர் கூட்டம் எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூயநீராகக் காத்தல்போலத் தமிழைத் தூய தமிழாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதி யிருந்தாலும் பல செய்தித் தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. சொற்பொழிவுகள் நல்ல தமிழில் கேட்கப்படுகின்றன. வாழ்த் துக்கள் வரவேற்புக்கள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந் நன் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமை யால் தமிழ்த்தாய் பெற்றாள் அத் தவமகன் அடிச்சுவட்டை அன்புச் சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மைபோலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் இளைய மறைமலை யடிகள் இன்று பல்கிவருப. ஆதலின் தமிழ், தனித்தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன்சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம்.

டை

டாக்டர் வ.சுப. மாணிக்கம் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர்

(பக். 15 - 26)

vii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/8&oldid=1588162" இலிருந்து மீள்விக்கப்பட்டது