உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் முகவுரைகள் - மறைமலையடிகள்

163

கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தீற்றியவாறு போலவுங், கலங்கற்சின்னீர் தெருளாமையான் உண்பானை, அறிவுடையான் ஒருவன் பேய்த்தேரைக்காட்டி ‘உதுக்காணாய்! நல்லதொருநீர் தோன்றுவ, அந்நீர்பருகாய், இச்சேற்று நீர் பருகி என்செய்தி?” என்று கொண்டுபோய், நல்லதொருநீர் தலைப் படுவித்து ஊட்டியது போலவுந், தான் ஒழுகா நின்றதோர் இணைவிழைச்சினுள்ளே மிக்கதோர் ஒழுக்கங்காட்டினான்.” என்று இறையனாரகப்பொருள் முதற்சூத்திர வுரையின்கண் நன்கெடுத்து விளக்கிக்காட்டியவாற்றானும், ஆசிரியர் இளங்கோவடிகள் தாம் ‘சிலப்பதிகாரம்’ என்னுஞ் செந்தமிழ்க் காப்பியம் இயற்ற வெண்ணியதன் நோக்கம் இதுவென்பது புலப்பட

66

"அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉஞ் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்

சிலப்பதி காரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”

என அந்நூற்பதிகத்தில் ஓதியருளியவாற்றானும் நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, அறிவு விளக்கத்திற்கும், மனமொழி மெய்கள் தூயவாதற்கும் ஏற்ற இன்பச்சுவை ஒன்றுமே முதிர்ந்து நிற்கப் புதுக்கதைகளும் நாடகக் காப்பியங்களும் இயற்றுதலே எல்லாராலும் விரும்பற்பால தொன்றாம். மற்று, அறிவுவிளக்கத் திற்குப் பழுது செய்யும் இயற்கை மாறுபாடுகளும், அகந் தூய்மைக்கு ஒவ்வா நிகழ்ச்சிகளுமே நிரம்ப அந்நூல்களை யமைத்தல் உயர்ந்த புலனெறி வழக்கிற்கு இசையாததொன்றா மென்று உணர்ந்து கொள்க. வடமொழியினின்று மொழி பெயர்க்கப்பட்டும், வட மொழியிலுள்ளவைகளைப் போற் செய்யப்பட்டும் இஞ்ஞான்று தமிழில் வழங்கும் புராணங்கள் காவியங்கள் முதலியன வெல்லாம், பகுத்தாராய்ந்து பார்க்க வல்லார்க்கு, அவர் நாடொறும் பழகும் இருவகை இயற்கை நிகழ்ச்சிகளொடுந் திறம்பி, அறிவுக்கு இசையாதனவாயிருத் தலின், அவை உயர்ந்த புலனெறி வழக்கின் பாற் படாவாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/196&oldid=1590243" இலிருந்து மீள்விக்கப்பட்டது