உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் - 26

சேர்த்ததும்; உரைநயங்கள் பல மாற்றியதும் புதியவாய்ச் சேர்த்ததும்; சொற்களையுஞ் சொற்றொடர் சொற்றொடர் களையுஞ் சந்தமிழ்ச்சுவை துளும்ப மாற்றியதும்; இன்னும்

இவைபோன்ற நுண்ணிய திருத்தங்கள் பல உரைநெடுகச் செய்ததுமாகும்.

ஒரு நூலுக்கு எழுதப்படும் உரை அந்நூலாசிரியன் காலத்தே செய்யப்பட்டு அவனாலேயே முழுதுந்திருத்தப் பட்டு அமையு மானால், அத்தகைய உரையே நூலாசிரியன்றன் கருத்தறிந்த உரையாகும். அப்பெருநலம் இம்மும்மணிக் கோவைக்கு வாய்க்குமாறு முருகப்பிரான் றிருவருள் இயைத்தமைகண்டு இது தன்னைப் பயில்வரர் மிக மகிழற் பாலார். எமதிளமைக்காலத்தே இயற்றப்பட்ட இச்செய்யுள் நூல், நாற்பத்தோராண்டுகட்குப்பின் இப்போதுரையுடன் வெளிப்போந்து தமிழுலகுக்குப் பயன்படு மாறருள் புரிந்த முருகப்பிரான் றிருவடிப்போதுகட்கு எமது புல்லிய வணக்கம் உரித்தாகுக!

L

எட்டாண்டுகட்கு மேலாக இந்நூலின் உரையினைத் திருத்துவதிலும், இதனை அச்சிடுவதிலும் எமக்குண்டான உழைப்புச் சிறிதன்று, பொருட்செலவோ ஐயாயிர ரூபாய்க்கு மேலாயிற்று.இப்பெருஞ்செலவில் ஒருபகுதிக்குப் பயன்படுமாறு, யாழ்பாணந் தெல்லிப்பழையில் தமிழ்க்கலைவல்ல நுண்ணறி வினராய்த்திகழ்ந்த வழக்கறிஞரும் எம் நண்பருமான திருவாளர் தம்பையா பிள்ளையவர்களின் இளையபுதல்வியாரான திருமகள் சிவநாயகியம்மையாரும் அவர்தங்கணவரும் எம்பால் மெய்ப்பொருள் கேட்டஞான்று எமக்கு ஐந்நூறுரூபா காணிக்கை செலுத்தினர். அவர்கள் எல்லாநலங்களுடனும் நீடினிது வாழ்கவென்று அம்பலவாணரம்மை திருவடிகளை வேண்டுதும்.

பல்லாவரம், பொது நிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு, 1972,

மார்கழி,18 (1942, ஜனவரி, 1)

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/215&oldid=1590262" இலிருந்து மீள்விக்கப்பட்டது