உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் - 26

இன்றியமையாததாய்த் தானே வந்து கூடிற்று. ஆகவே, யாம் முன்னர் எழுதக் குறித்திருந்த 'தமிழர் நாகரிகம்' என்பதனையும் இதன்கண் விரித்து விளக்க இடம் பெற்றேம். ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகும் முன்னரே தமிழர் நாகரிக வாழ்க்கையில் முதிர்ச்சிபெற்று நின்று, பின்னர்த் தம்மொடு வந்து கலந்த அவ்வாரியரைத் திருத்தினமை இதன்கண் நன் கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.பழந்தமிழ் நூலாராய்ச்சி யின்றி, வட நூற் பயிற்சி ஒன்றேயுடையார் ஆரியரை உயர்த்துத் தமிழரை இழித்துக் கூறுவனவெல்லாம் பொருந்தாமையுந், தமிழரே எவ்வாற்றானும் உயர்ந் தோராதலும் இவைதம்மை ஆராயாதார்க்குப் புதுமையாய்த் தோன்றினும், யாம் ஆராய்ந்து சான்றுகளோடு உரைப்பனவற்றை நடுநிலை வழாது நின்று காண்பார்க்கு எம் உரையின் மெய்ம்மை தானே விளங்குதல் திண்ணம்.

- மறைமலை அடிகள்

இரண்டாம் பதிப்பு முகவுரை

வ்விரண்டாம் பதிப்பிற் பல புதியகுறிப்புகள் விரித்தெழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முதற்பதிப்பில் இருந்தவைகளிற் சிற்சில திருத்தங்களுஞ் செய்யப்படிருக் கின்றன. இவ்வாறற்றால் இந்நூல் முன்னையினும் ஒருபங்கு கூடப்பெருகிவிட்டது.

இனித் தமிழருட் சிறந்த வேளாளர் நாகரிகத்தை விளக்கவே தமிழரது நாகரிகமுந் தானே பெறப்படுமாகலானும், முதற் பதிப்புக்கு வைத்த 'தமிழர் நாகரிகம்' அல்லது 'வேளாளர் யாவர்?' என்னும் இருபெயர்கள் வழங்குதற்கு இடர் பயத்தலானும் இப் பதிப்புக்கு அவ்விரண்டையும் உள்ளடக்கிய வேளாளர் நாகரிகம்' என்பதனைப் பெயராக அமைத்தாம்.

பல்லாவரம்

1927

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/243&oldid=1590290" இலிருந்து மீள்விக்கப்பட்டது