உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92

❖ மறைமலையம் - 3 ❖

முழுதுமுணர்ந்த அறக்கடவுளால் இம்மை மறுமை யிரண்டிலும் மிகவும் ஒறுக்கப்படுதல் திண்ணமாகலின் நல்லவர்க்குத் தீங்கிழைத்தவர் எத்திறத்தானும் தப்ப மாட்டா ரென்றுணர்க.

நல்லது; அஃது உண்மையாயின் ஆகுக. எல்லா நிகழ்ச்சிகளும் ஒளியாகாயத்தில் பொறிக்கப் படுகின்றன என்பதும், அவ்வாகாயத்தில் பொறிக்கப்பட்ட அவற்றைத் தெளிவுக்காட்சி யுடையோர் உடனே உணர்ந்துகொள்வரென்பதும் நமது அனுபவத்திற் காணப்படாமையின் அவை உண்மையே யாகுமென்பது எவ்வாற்றால் துணியப்படுமெனின், அவற்றின் உண்மைக்கு இஞ்ஞான்றுள்ள ஆதாரங்கள் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/125&oldid=1623812" இலிருந்து மீள்விக்கப்பட்டது